×

மனநலம் பாதித்த பெண் பலி இழுவை வாகனத்தை இயக்கிய போக்குவரத்து காவலர் கைது

திருவொற்றியூர்: எர்ணாவூரை சேர்ந்தவர் மஞ்சுளா (39), மனநலம் பாதிக்கப்பட்டவர். சாலையோரம் சுற்றித்திரிந்த இவர் பொதுமக்கள் தரும் உணவுகளை சாப்பிட்டு சாலையோரம் தூங்குவார். இந்நிலையில், கடந்த 12ம் தேதி அன்று
எண்ணூர் விரைவு சாலை எல்லையம்மன் கோயில் சந்திப்பில் சாலையோரம் மஞ்சுளா தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கே நிறுத்தப்பட்டிருந்த போக்குவரத்து போலீசாரின் இழுவை வாகனத்தை பின்பக்கமாக நகர்த்தும்போது மஞ்சுளா தலை நசுங்கி அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக திருவொற்றியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். இந்நிலையில் வாகனத்தை இயக்கிய போக்குவரத்து காவலரான தர்மராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது பொது இடத்தில் அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டுதல் மற்றும் கொலை குற்றம் ஆகாத மரணம் விளைவித்தல் போன்ற இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post மனநலம் பாதித்த பெண் பலி இழுவை வாகனத்தை இயக்கிய போக்குவரத்து காவலர் கைது appeared first on Dinakaran.

Tags : Tiruvottiyur ,Manjula ,Ernavur ,Ennore Expressway Behanayamman ,
× RELATED குரு பெயர்ச்சியை முன்னிட்டு...